2022-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வதிவற்ற கம்பனிகளினால் நல்லெண்ணத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளை வதிவிட நிறுவனங்களினால் பெற்றுக் கொள்வதற்கான பொது வழிமுறை - இலங்கையில் அந்நியசெலாவணியின் ஒழுங்குறுத்துகை மற்றும் மேம்பாடு சார்பில் வதிவற்ற முதலீட்டாளர்களினால் வதிவிட கம்பனிகளின் பங்குகளை சுவீகரிக்கும் நோக்கத்திற்கு முதலீட்டாளரின் உள்வரும் முதலீட்டுக் கணக்கின் ஊடாக நிதி அனுப்பப்படாமல் கவனயீனம் அல்லது அறியாமல் வதிவிட கம்பனிகளின் கணக்கிற்கு நேரடியாக மேற்கொள்ளப்படும் அனுப்பீடுகள் சார்பில் குறித்த வதிவற்ற முதலீட்டாளர்களுக்கு பங்குகளை வழங்குவதற்கு 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் இலங்கையில் கூட்டிணைக்கப்பட்டுள்ள கம்பனிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான கட்டளையொன்றை பிறப்பிக்குமாறு இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையானது நிதி அமைச்சருக்கு சிபாரிசு செய்துள்ளது. இதற்கிணங்க 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் 7(10) ஆம் பிரிவின் கீழ் உரிய கட்டளைகளை வௌியிடுவதற்கு நிதி அமைச்சரினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் சம்பந்தமாக அமைச்சரவையின் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. |