2022-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக் கோவைக்கான திருத்தம் - எவரேனும் ஆளொருவர் குற்றம்புரியும் சந்தர்ப்பத்தில் அவருடைய வயது 18 வயதிற்கு குறைவாகவிருப்பின் மரணத் தண்டனையினை விதிப்பதை தடை செய்யும் ஐக்கிய நாடுகளின் சிறுவருக்கான நியாயத்தினால் வழங்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட சட்டங்களுக்கு அமைவாக செயற்படுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஆகக்குறைந்த ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக செயலாற்றும் பொருட்டு குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக் கோவையில் 281 ஆம் பிரிவினை திருத்துவதற்கு ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |