• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக் கோவைக்கு திருத்தங்களை அறிமுகப்படுத்துதல்
- நீதி வழங்கும் செயற்பாட்டினை பலப்படுத்துவதற்கு நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகளின் பணிகளை இலகுபடுத்துவதற்குமாக தேவையான சந்தர்ப்பங்களில் வழக்கு நடவடிக்கைகளை கட்புல, செவிபுல தொடர்புகளின் உதவியுடன் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, திறந்த நீதிமன்றமொன்றில் சாட்சியாளர் ஒருவர் வாய்மொழிமூலம் வழங்கும் சாட்சி சம்பந்தமாக உரிய ஏற்பாடுகளை உள்ளடக்கும் பொருட்டு குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக் கோவையின் 167(A) தொடக்கம் 167(N) வரை புதிய பிரிவுகளை உள்ளடக்கி திருத்துவது பொருத்தமாதென இது தொடர்பிலான விடயங்களை பரிசீலிப்பதற்காக நீதி அமைச்சரினால் நியமிக்கப்பட்டுள்ள டிஜிட்டல்மயப்படுத்தல் மற்றும் நீதிமன்றங்களின் தானியங்கள் தொழிற்பாடு தொடர்பிலான சட்டக்குழுவும் சிவில் சட்டங்களை மறுசீரமைக்கும் குழுவும் சிபாரிசு செய்துள்ளன. இந்த சிபாரிசுகளின் மீது குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக் கோவையினைத் திருத்துவதற்கும் இதன் பொருட்டு சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்குமாக நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.