2022-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இரண்டு விமான நிலைய ஹோட்டல்களை நிர்மாணித்து செயற்படுத்துவதற்காக மத்தள ராஜபக்ஷ சருவதேச விமான நிலையத்திற்கு அண்மையில் அமைந்துள்ள இரண்டு காணித் துண்டுகளை குத்தகை அடிப்படையில் வழங்குதல் - மத்தள ராஜபக்ஷ சருவதேச விமான நிலையம் அமைந்துள்ள அம்பாந்தோட்டை பிரதேசம் பிரதான சுற்றுலா முடிவிடமொன்றாகவிருந்த போதிலும் தற்போது இந்த பிரதேசத்தில் சில ஹோட்டல்கள் மாத்திரமே இயங்குகின்றன. விமான நிலையத்திற்கு அருகாமையில் 04 நட்சத்திர ஹோட்டல்கள் இரண்டினை நிர்மாணிப்பதன் மூலம் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கு மிக நலன்மிக்க நிலைமையினை உருவாக்குமென தெரியவந்துள்ளது. இதன் பொருட்டு விமான நிலையத்தின் முனைவிட கட்டடத்திற்கு வலப்பக்கத்தில் அமைந்துள்ள 15 ஹெக்டயார் விஸ்தீரணமுடைய இரண்டு காணித் துண்டுகள் இனங்காணப்பட்டுள்ளன. இதற்கிணங்க, உத்தேச இரணடு ஹோட்டல்களை நிர்மாணிப்பதற்காக முதலீட்டாளர்களிடமிருந்து பிரேரிப்புகளை கோரும் பொருட்டு சுற்றுலாத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |