• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை விமானப் படைக்கு வைத்தியசாலையொன்றை நிர்மாணிக்கும் பொருட்டு நாராஹேன்பிட்ட பிரதேசத்திலிருந்து காணித் துண்டொன்றை வழங்குதல்
- நகர அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக நாராஹேன்பிட்ட பிரதேசத்தில் ஏக்கர் 07 பேர்ச்சர்ஸ் 39.9 விஸ்தீரணமுடைய காணி நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உடைமையாக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையொன்றை நிர்மாணிப்பதற்காக இந்த காணியிலிருந்து 03 ஏக்கரை பெற்றுத் தருமாறு இலங்கை விமானப் படை நகர அபிவிருத்தி அதிகாரசபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கிணங்க, உரிய காணியிலிருந்து 03 ஏக்கர் விஸ்தீரணமுடைய காணித் துண்டொன்றை இறையிலி கொடையொன்றாக இலங்கை விமானப் படைக்கு உடைமையாக்கும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.