2022-03-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
புலம்பெயர் தொழிலாளர்கள் பணம் அனுப்புதலை மேம்படுத்துவதற்கு ஊக்குவிப்புகளை வழங்குதல் - இலங்கைக்கு அந்நிய செலாவணி கிடைக்கும் பிரதான வழியான வௌிநாட்டு தொழில்வாய்ப்புத் துறையின் மூலம் வருடாந்தம் அண்ணளவாக 7-8 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் அந்நிய செலாவணி நாட்டிற்கு அனுப்பப்படுகின்றது. இவ்வாறு புலம்பெயர் தொழிலாளர்களினால் வேறு நாடொன்றில் ஈட்டப்படும் அந்நிய செலாவணி அடுத்துவரும் புதுவருட காலப்பகுதியில் நாட்டிற்கு அனுப்பப்படுவதை ஊக்குவித்தல், புலம்பெயர் தொழிலாளர்களைப் பாராட்டுதல் மற்றும் அவர்களை தங்கி வாழ்வோருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் கூடிய பொருளாதார நலன்களை வழங்கும் பொருட்டு புலம் பெயர் தொழிலாளர்களினால் இந்நாட்டிற்கு அனுப்பப்படும் ஐக்கிய அமெரிக்க டொலரொன்று சார்பில் செலுத்தப்படும் 10/- ரூபா கொண்ட ஊக்குவிப்புத் தொகையை 38/- ரூபாவாக அதிகரிக்கும் பொருட்டு தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |