2022-03-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
காணாமல் போனவர்கள் சம்பந்தமாக செய்யப்படும் முறைபாடுகள் தொடர்பில் விசாரணைகளை நடாத்துதல் - 2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் காணாமல் போனவர்கள் சம்பந்தமான அலுவலகம் தாபிக்கப்பட்டுள்ளது. மாத்தறை, மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் இந்த அலுவலகத்தால் பிராந்திய அலுவலகங்கள் தாபிக்கப்பட்டுள்ளதோடு, இந்த பிராந்திய அலுவலகங்களுக்கு காணாமல் போனவர்கள் சம்பந்தமான 14,988 முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக முறையான விசாரணைகளை நடாத்தியதன் பின்னர் காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு அறிக்கைகளை வழங்குவது அடங்கலாக பாரிய பொறுப்புகள் காணாமல் போனவர்கள் சம்பந்தமான அலுவலகத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த முறைபாடுகளை விசாரணை செய்து முற்றாக்குவதற்கு 25 விசாரணை சபைகளை நியமித்து துரித நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |