2022-03-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தெரனியகல பொலிஸ் பிரிவில் நூரிய புதிய பொலிஸ் நிலையத்தை தாபிப்பதற்காக காணியினை உடைமையாக்கிக் கொள்ளல் - கேகாலை மாவட்டத்தின் தெரனியகல பிரதேச செயலாளர் பிரிவின் இலக்கம் 110 தொடாவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவில் நூரிய பொலிஸ் நிலையத்தை தாபிப்பதற்கு இனங்காணப்பட்டுள்ளது. இந்த புதிய பொலிஸ் நிலையத்தை தாபிப்பதன் மூலம் இந்த பிரதேச மக்களுக்கு வினைத்திறன் மிக்க பொலிஸ் சேவையொன்றை வழங்குவதற்கும் பிரதேசத்தில் நிகழும் குற்றங்கள் மற்றும் ஊழல் செயற்பாடுகளை தடுத்து பாதுகாப்பினை உறுதி செய்வதற்கும் இயலுமாகும். இந்த பொலிஸ் நிலையத்தை தாபிப்பதற்கு கமத்தொழில் அமைச்சின் கீழுள்ள மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான நூரியவத்த என்னும் காணியிலிருந்து 02 ஏக்கர்களை உடைமையாக்கிக் கொள்வதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |