• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-03-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான முத்துராஜவெல கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள காணித் துண்டொன்றை குத்தகை அடிப்படையில் வழங்குதல்
- இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான முத்துராஜவெலவில் அமைந்துள்ள 400 ஏக்கர் நில பிரதேசம் கடல் மணல் நிரப்பப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த காணியிலிருந்து பல காணித் துண்டுகள் தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த கருத்திட்டங்களுக்காக அரசாங்க மற்றும் தனியார் முதலீட்டாளருக்கு கையளிக்கப்பட்டுள்ளது. குளிரூட்டப்பட்ட களஞ்சிய வசதிகளுக்காக இந்த காணியிலிருந்து காணித் துண்டொன்றை பெற்றுத்தருமாறு M/s Emergent Cold (Pvt) Ltd., கம்பனியினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, குறித்த நிறுவனமானது உரிய காணித் துண்டினைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை முதலீட்டு சபை சட்டத்தின் 17 ஆம் பிரிவின் கீழ் அடிப்டைத் தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ளதாக இலங்கை முதலீட்டு சபை அறிவித்துள்ளது. இதற்கிணங்க, உத்தேச கருத்திட்டத்திற்கு பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ள ஏக்கர் 04 றூட் 02 விஸ்தீரணமுடைய காணித் துண்டொன்றை 30 வருட நீண்டகால குத்தகை அடிப்படையில் இந்தக் கம்பனிக்கு வழங்கும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.