2022-02-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சந்தையினை குறியிலக்காகக் கொண்ட பால் உற்பத்தி கருத்திட்டம் - பால் உற்பத்தியாளர்களின் வினைத்திறனையும் உற்பத்திகளின் தரத்தையும் மேம்படுத்துவதற்கு உயர் தரத்திலான வழிமுறைகளை பயன்படுத்தும் நோக்கில் சந்தையினை குறியிலக்காகக் கொண்ட பால் உற்பத்தி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய இராச்சியத்தின் கமத்தொழில் திணைக்களத்தினால் நிதி உதவி வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டம் சார்பில் 2024 செப்ரெம்பர் மாதம் வரை தேவையான நிதி வழங்குவதற்கும் ஐக்கிய இராச்சியத்தின் கமத்தொழில் திணைக்களம் உடன்பாடு தெரிவித்துள்ளது. உத்தேச கருத்திட்டத்தின் மூலம் அரசாங்கத்தினதும் தனியார் துறையினதும் பால் உற்பத்தி துறை சார்ந்த 38 தரப்பினர்களுடன் இணைந்து அவர்களுடைய ஆற்றலை விருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய இராச்சியத்தின் கமத்தொழில் திணைக்களத்திற்கும் இந் நாட்டின் கமத்தொழில் அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |