2022-02-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை மட்பாண்ட கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான வாவுட கைத்தொழிற்சாலையை தனியார் முதலீட்டாளர் ஒருவரின் ஊடாக செயற்படுத்துதல் - இலங்கை மட்பாண்ட கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான குருநாகல் மாவட்டத்தின் மாவத்தகம பிரதேசத்தில் அமைந்துள்ள வாவுட ஓட்டு தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகள் மூலப்பொருளை பெற்றுக் கொள்வதில் எதிர் நோக்கிய பிரச்சினை காரணமாக 2010 ஆம் ஆண்டில் இடைநிறுத்தப்பட்டது. இதன் பின்னர் அநுராதபுரம் சந்தஹிருசாயவிற்குத் தேவையான செங்கல் உற்பத்தி செய்யும் பொருட்டு கடற்படையினால் இந்த தொழிற்சாலை பயன்படுத்தப்பட்டுள்ளதோடு, 2017 ஆம் ஆண்டின் பின்னர் இந்தப் பணிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஆதலால், ஏக்கர் 09 றூட் 01 பேர்ச்சர்ஸ் 31 விஸ்தீரணம்கொண்ட வாவுட தொழிற்சாலையை கழிமண் சார்ந்த கைத்தொழிலொன்றை ஆரம்பித்து நடாத்திச் செல்வதற்காக ஆர்வமுள்ள முதலீட்டாளர்களிடமிருந்து பிரேரிப்புகளை கோரி உயர் சாத்தியத் தன்மையினை உறுதிச் செய்யும் முதலீட்டாளருக்கு குத்தகை அடிப்படையில் வழங்கும் பொருட்டு கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |