2022-02-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்திற்கும் இந்தியாவின் வௌிநாட்டு சேவைகள் பற்றிய சுஷ்மா ஸ்வராஜ் நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை - பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்திற்கும் இந்தியாவின் வௌிநாட்டு சேவைகள் பற்றிய சுஷ்மா ஸ்வராஜ் நிறுவனத்திற்கும் இடையில் ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி பரிமாறல்களை மேம்படுத்தும் நோக்கில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. உத்தேச வரைவு உடன்படிக்கைக்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. இதற்கிணங்க, உரிய புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு வெளிநாட்டு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |