2022-02-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சீசல்ஸ் குடியரசின் பயிலிளவல் அதிகாரிகளுக்கு ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழக புலமைப்பரிசில்களை வழங்குதல் - ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தினால் வௌிநாட்டு மாணவர்களுக்கான அதன் சேவைகளை விரிவுப்படுத்தியுள்ளதோடு, தற்போது பல நாடுகளைச் சேர்ந்த முப்படைகளின் பயிலிளவல் அதிகாரிகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தில் சேர்வதற்கு எதிர்பார்ப்பதாக சீசல்ஸ் குடியரசின் உயர்ஸ்தானிகர் வெளிநாட்டு அமைச்சுக்கு அறிவித்துள்ளார். இதற்கிணங்க சீசல்ஸ் குடியரசின் முப்படைகளைச் சேர்ந்த இரண்டு பயிலிளவல் அதிகாரிகளுக்கு ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தில் சேர்க்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |