• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கும் மேல் விதிப்பு வரி சம்பந்தமாக செய்யப்படும் பொய்யான பிரச்சாரங்கள்
- 2021 ஆம் ஆண்டிற்குரியதாக 2,000 மில்லியன் ரூபாவிற்கு கூடிய தேறிய இலாபத்தினைப் பெறுபவர்கள் மற்றும் கம்பனிகளுக்கு 25 சதவீத மேல் விதிப்பு வரியினை விதிப்பது சம்பந்தமாக அவர் 2022 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் முன்மொழிந்த பிரேரிப்பின் கீழ் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம் என்பன உள்ளடக்கப்படவில்லையென நிதி அமைச்சரினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது. இதற்கிணங்க, இது சம்பந்தமாக சில தரப்புகளினால் மேற்கொள்ளப்பட்டுவரும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அடிப்படை எதுவும் இல்லையெனவும் நிதி அமைச்சரானவர் மேலும் அமைச்சரவைக்கு அறிவித்தார்.