• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வீட்டு பொருளாதார பாதுகாப்பு (சலுகை பொதி) நிகழ்ச்சித்திட்டம்
- 2022 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவு மூலம் பரந்துபட்ட வீட்டுப் பொருளதார அபிவிருத்திக்கான தேசிய நிகழ்ச்சித்திட்ட மொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்கீழான நிகழ்ச்சித்திட்டமொன்றாக வீட்டு பொருளாதார பாதுகாப்பு (சலுகை பொதி) நிகழ்ச்சித்திட்டமானது இனங்காணப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் தாக்கத்தினை இலகுபடுத்துவதற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் ஒவ்வொன்றிலுமிருந்து 40 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், விசேட தகவுத்திறன்களைக் கொண்டு உரிய பிரதேச செயலாளரின் சிபாரிசின் மீது தெரிவு செய்யப்பட்டு குறித்த குடும்பங்களுக்கு 2,000/- ரூபா பெறுமதிமிக்க பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இயலுமாகும் வகையில் பயனாளி குடும்பங்களுக்கு டிஜிட்டல் அட்டையொன்று வழங்கப்படுவதோடு, இந்த அட்டையினைப் பயன்படுத்தி வீட்டுப் பொருளாதார அபிவிருத்திக்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் தொழில்முயற்சியாளர்களை முன்னிலைப்படுத்தி சிறிய சிறப்பு விற்பனை நிலையங்கள் ஊடாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய நுகர்வுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்படும். இதற்கிணங்க, இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு வர்த்தக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.