2022-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கும் ஐக்கிய அமெரிக்க குடியரசின் Texas A & M பல்கலைக்கழகத்திற்கும் இடையில் ஆராய்ச்சி ஒத்துழைப்பு - மன உளைச்சல் நோயின் அறிகுறிகளுக்கும் உயிரியல் இரசாயன போக்கிற்கும் இடையிலான தொடர்பு பற்றி ஆராயும் ஆராய்ச்சிக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கும் ஐக்கிய அமெரிக்க குடியரசின் Texas A & M பல்கலைக்கழகத்திற்கும் இடையில் பொருட்கள் பரிமாறல் தொடர்பிலான உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. மன உளைச்சல் நோயின் அறிகுறிகள் மற்றும் குருதி உட்பட சிறுநீர் என்பவற்றுக்கு இடையிலான வளர்சிதை மாற்றம் தொடர்பினை உறுதிப்படுத்திக் கொள்தல் மற்றும் ஒவ்வொரு தரப்பினரினதும் திட்டவட்டமான தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் நோக்காகக் கொண்டு ஆராயச்சி ஒத்துழைப்பினை தாபித்துக் கொள்வது இந்த உடன்படிக்கையின் நோக்கமாகும். இதற்கிணங்க, உத்தேச ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |