• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-02-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முதலீட்டு பிணக்குகள் மேல் நீதிமன்ற சட்டம்
– இலங்கையில் முதலீட்டுக்கு சாதகமான சட்ட சூழலொன்றை உருவாக்குவதற்கு செய்யப்பட வேண்டிய சட்ட சீர்த்திருத்தங்கள் தொடர்பிலான சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு நீதி அமைச்சின் விசேட பிரிவின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள வர்த்தக சட்ட மறுசீரமைப்பு பற்றிய உபகுழுவுக்கு நீதி அமைச்சரினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த உபகுழுவினால் 100 மில்லியன் ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட ஆரம்ப முதலீடுகளிலிருந்து எழும், 50 மில்லியன் ரூபா நிதி வரையறை கொண்ட "பிணக்குகள்" தொடர்பில் வழக்கு விசாரணைகளை மேற்கொண்டு தீர்ப்பினை வழங்கும் நீதிமன்ற அதிகாரத்துடன் கூடிய முதலீட்டு பிணக்குகள் மேல் நீதிமன்றமொன்றைத் தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டிலான ஏற்பாடுகளை உள்ளடக்கி சட்டமூல மொன்றைத் தயாரிக்குமாறு சட்ட வரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவை யினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.