2022-02-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஐக்கிய அமெரிக்க குடியரசின் La Jolla நிறுவனத்திற்கும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கும் இடையில் ஆராய்ச்சி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு உடன்படிக்கைகளை செய்துகொள்ளல் – ஐக்கிய அமெரிக்க குடியரசின் நோய் எதிர்ப்பியல் பற்றிய La Jolla நிறுவனத்திற்கும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கும் இடையில் 2017 ஆம் ஆண்டிலிருந்து கல்வி ஒத்துழைப்பு பேணப்பட்டு வருகின்றதோடு, இதுவரை ஆராய்ச்சி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு 505,840 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட நிதி குறித்த ஒத்துழைப்புக்கு அமைவாக சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளது. காசநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிதல், புரிந்து கொள்தல் மற்று\ குறைத்துக் கொள்தல் என்பவற்றுக்கான ஆராய்ச்சி நோக்கங்களை மேம்படுத்துதல் மற்றும் மாணவர்கள், கல்வி பதவியணியினரை பரிமாற்றிக் கொள்ளலை நோக்காகக் கொண்டு தற்போது நடைமுறையிலுள்ள கல்வி ஒத்துழைப்பினை மேலும் விருத்தி செய்து கொள்வதற்கு இருதரப்பும் உடன்பாடொன்றுக்கு வந்துள்ளன. இதற்கிணங்க, உரிய கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்து'வது சம்பந்தமாக துணை வழங்கல் உடன்படிக்கை யொன்றையும் பொருள் பரிமாறல் உடன்படிக்கையொன்றையும் கைச்சாத்திடு'ம் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |