2022-01-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
'கிராமத்துடன் கலந்துரையாடல் - வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் ஒரு இலட்சம் வேலைத் திட்டம்' கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் - உற்பத்தி பொருளாதாரத்தை பலப்படுத்தும் நோக்கில் 2022 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பொன்றுக்கு அமைவாக 'கிராமத்துடன் கலந்துரையாடல் - வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் ஒரு இலட்சம் வேலைத் திட்டம்' கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை நாடு முழுவதும் 336 பிரதேச செயலாளர் பிரிவுகளை தழுவும் விதத்தில் 14,021 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மக்களின் தேவைகளை பொதுமக்களே இனங்காண்பதற்கு இயலுமாகும் வகையில் கருத்திட்டங்களை இனங்காணும் செயற்பாடானது முழுமையாக பண்முகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிணங்க திட்டமிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சித்திட்டத்தை 2022 பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை பற்றி அறிவித்து நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. |