• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-01-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவைக்கான திருத்தம்
- வழக்கொன்றின் முறைப்பாட்டாளருக்கும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அனைவருக்கும் வழக்கு அறிக்கையில் கோவையிடப்பட்டிருக்கும் வழக்கு தீர்ப்பினை அல்லது இறுதிக் கட்டளையின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதியொன்றினை கட்டணமின்றி வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு இயலுமாகும் வகையில் குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவையின் 442 ஆம் 443 ஆம் பிரிவுகளை திருத்தும் பொருட்டு 2021 மே மாதம் 31 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.