• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-01-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஒப்பந்தங்களை வழங்குதல்
- மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித் திட்டத்தை வினைத்திறன் மிக்கதாகவும் துரிதமாகவும் நடைமுறைப்படுத்து வதற்கு இயலுமாகும் வகையில் 21 ஒப்பந்த பொதிகளாக இந்த நிகழ்ச்சித்திட்டமானது திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 21 பொதிகளிலிருந்து ஏற்கனவே 06 பொதிகளின் வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு, மேலும் 06 பொதிகளுக்கான நிர்மாணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. சர்வதேச போட்டி வழிமுறையினைப் பின்பற்றி தெரிவு செய்யப்பட்டுள்ள ஒப்பந்தக்காரர்களுக்கு மீதி 09 பொதிகளுக்குரிய ஒப்பந்தங்களை வழங்கும் பொருட்டு நீர்ப்பாசன அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.