• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-01-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவையும் நல்லிணக்கத்திற்கான நிகழ்ச்சித்திட்டமும்
- வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, தென் மாகாணத்தில் மாத்தறை மற்றும் மத்திய மாகாணத்தில் நுவரெலியா ஆகிய மாவட்டங்களை மையப்படுத்தி நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 04 நடமாடும் சேவையும் நல்லிணக்கத்திற்கான நிகழ்ச்சித்திட்டத்தையும் இந்த ஆண்டில் நடாத்துவதற்கு நீதி அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ளது. காணி, உத்தியோகபூர்வ ஆவணங்கள், சட்ட நடவடிக்கைகள் போன்ற பணிகளுக்கு உரியதாக நிலவும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்குத் தேவையான ஒத்தாசையினை வழங்குதல், நீதி அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களினால் வழங்கப்படும் சேவைகள் பற்றி பொதுமக்களுக்கும் வௌிக்கள உத்தியோகத்தர்களுக்கும் அறியச் செய்வித்தல் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடாத்துவதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் முதலாவது நிகழ்ச்சித்திட்டமானது வட மாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் 2022 சனவரி மாதம் 26 ஆம் திகதியிலிருந்து 2022 சனவரி மாதம் 30 ஆம் திகதிவரை நடாத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டம் தொடர்பில் நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட மேற்போந்த விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.