2022-01-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
MV X-press Pearl கப்பல் கடல் பேரழிவு தொடர்பிலான தற்போதைய நிலைமை - கடல் பேரழிவுக்கு உள்ளான MV X-press Pearl கப்பலின் கழிவுகளையும் சேதமடைந்த பாகங்களையும் அப்புறப்படுத்தும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, 120 நாட்களில் இந்தப் பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ளது. இது சம்பந்தமாக நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பின்வரும் மேலதிக விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
* கழிவுகளை அப்புறப்படுத்தும் செயற்பாட்டின் விளைவாக மேலும் கடல் மாசடையாதென்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு இந்த செயற்பாட்டினை மேற்பார்வை செய்வதற்கு வணிக கப்பல் செயலகத்தின் பணிப்பாளர் அதிபதியின் தலைமையில் உரிய நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட கண்காணிப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள தெனவும். * ஏற்கனவே பாதிக்கப்பட்ட சகல கடற்றொழிலாளர்களுக்கும் முதற்கட்ட நட்டஈட்டுத் தவணைத் தொகை செலுத்தப்பட்டுள்ளதெனவும். * களுத்துறை மாவட்டத்திற்கு உரியதாக மீன் பிடிப்பதற்கான தடையானது முழுமையாக நீக்கப்பட்டுள்ளதெனவும். * கழிவுகளை அப்புறப்படுத்தும் செயற்பாடு முடிவடைந்ததன் பின்னர், கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் மேற் குறிப்பிட்ட தடை நீக்கப்படுமெனவும். * கடற்றொழில் மற்றும் சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையின் உரிமை கோரிக்கைகளின் ஒரு பகுதியான 3.7 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு வரவு வைக்கப்படுள்ளதெனவும் மீதி உரிமை கோரிக்கைகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு P&I கம்பனியுடன் பேச்சுவார்தைகள் நடாத்தப்படுகின்றதெனவும். * கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகள் மற்றும் ஏனைய மாதிரிகள் பகுப்பாய்வின் பொருட்டு வௌிநாட்டு இரசாயன கூடங்களுக்கு தொடர்பு படுத்தப்பட்டுள்ளதெனவும். * அவுஸ்திரேலியாவின் Sparke Helmore Lawyers கம்பனியினால் சுற்றாடல் சேதங்களுக்கான உரிமை கோரிக்கைகள் சம்பந்தமான சட்ட ஆலோசனைகள் வழங்கப்படுகின்றதெனவும். |