2022-01-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2021/2022 பெரும்போகத்தில் நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டம் - நெற்செய்கை பண்ணும் விவசாயிகளுக்கு நியாயமான விலையினை வழங்குவதையும் அரசாங்கத்தினால் பாதுகாப்பான நெல் கையிருப்பினை பேணுவதையும் நோக்காகக் கொண்டு 2021/2022 பெரும்போகத்தில் அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்து வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நெல் அறுவடையினை கொள்வனவு செய்தலானது நெல் சந்தைப்படுத்தல் சபையின் மூலம் நேரடியாகவும் மாவட்ட செயலாளர்கள் / அரசாங்க அதிபர்களினால் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களை கையாள்வதன் மூலம் மேற்கொள்ளப் படுகின்றது. இதன் பொருட்டு தேவையான 29.805 மில்லியன் ரூபா நிதி ஏற்பாடானது அரசாங்க வங்கிகள் ஊடாக ஏற்பாடு செய்து கொள்ளப்படும். இதற்கிணங்க, கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு அமைச்சரவையினால் பின்வருமாறு தீர்மானிக்கப்பட்டது :
(i) 2021/2022 பெரும்போகத்தில் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் தனியர் துறையுடன் போட்டி விலைகளின் அடிப்படையில் நெல் கொள்வனவு செய்தல். (ii) 2021/2022 பெரும்போகத்தில் நெல் அறுவடை குறைவடைந்தால், இதன் காரணமாக பாதிப்புக்குள்ளாகும் நெற்செய்கையாளர்களின் வருமான மட்டத்தினை பாதுகாக்கும் பொருட்டு, நெல் கிலோ ஒன்றுக்கு 25/- ரூபா வீதம் நட்டஈடு செலுத்துதல். |