2022-01-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சுகாதார பராமரிப்பின் தரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பிலான தேசிய கொள்கை - நடைமுறையிலுள்ள "தரம் மிக்க சுகாதார சிகிச்சை மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு தொடர்பிலான தேசிய கொள்கைக்கு" 2015 மே மாதம் 27 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட 72 ஆவது சுகாதார மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட "நோயாளிகளின் பாதுகாப்பு தொடர்பிலான உலகளாவிய செயற்பாடுகள்" தொடர்பிலான பிரேரிப்பினை அடிப்படையாகக் கொண்டு குறித்த கொள்கையினைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சுகாதார பராமரிப்பின் தரம் மற்றும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் குறித்த திருத்தப்பட்ட கொள்கையை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |