• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-01-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தோட்டத் துறையிலுள்ள சுகாதார நிறுவனங்களை மாகாண சுகாதார அதிகாரபீடங்களுக்கு உடைமையாக்குதல்
- பெருந்தோட்ட மக்களுக்கு மிக பயனுள்ள சுகாதார சேவையொன்றை வழங்கும் நோக்கில் தோட்டத் துறையிலுள்ள சுகாதார நிறுவனங்களை மாகாண அதிகாரபீடங்களுக்கு உடைமையாக்குவது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இது தொடர்பில் பின்பற்றவேண்டிய வழிமுறை சம்பந்தமான சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அதிபதியின் தலைமையில் உரிய ஏனைய நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய உத்தியோகத்தர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தியோ கத்தர்கள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட சிபாரிசுகளுக்கு அமைவாக தோட்டத் துறையிலுள்ள 450 சுகாதார நிறுவனங்களில் முதலாம் கட்டத்தின் கீழ் 59 சுகாதார நிறுவனங்களை மாகாண சுகாதார அதிகாரபீடங்களுக்கு உடைமையாக்கிக் கொள்ளும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.