• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-01-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1934 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க ஊழியர் நட்டஈடு கட்டளைச்சட்டத்தை (139 ஆம் அத்தியாயம்) திருத்துதல்
- சேவைபுரியும் போது நிகழும் அவசர விபத்துக்கள் காரணமாக பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு செலுத்தப்படும் நலன்களை சமகால தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் இற்றைப்படுத்தும் பொருட்டு 1934 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க ஊழியர் நட்டஈடு கட்டளைச்சட்டத்தை (139 ஆம் அத்தியாயம்) திருத்துவதற்காக சட்டமூலமொன்றை தயாரிக்கும் பொருட்டு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதோடு, உரிய சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் இந்த சட்டமூலத்தை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.