2022-01-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஹங்கேரி அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் நிதி ஒத்துழைப்புக்காக செய்து கொள்ளப்பட்ட கட்டமைப்பு உடன்படிக்கையின் கீழ் 04 புதிய மேம்பாலங்களை நிர்மாணித்தல் - நாட்டின் உட்கட்டமைப்பு அபிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஹங்கேரியாவின் EXIM வங்கி ஊடாக சலுகை நிதி வசதிகளை வழங்குவதற்கு இலங்கைக்கும் ஹங்கேரியாவிற்கும் இடையில் நிதி ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்று செய்து கொள்ளப்பட்டுள்ளது. இதன் கீழ் கொஹூவலை மற்றும் கெட்டம்பே மேம்பாலங்களை நிர்மாணிக்கும் கருத்திட்டங்கள் ஏற்கனவே செயற்படுத்தப்பட்டுள்ளன. இந்த கருத்திட்டங்களுக்கு மேலதிகமாக தேசிய நெடுஞ்சாலைகள் வலயமைப்பின் முத்தெட்டுகல புகையிரத கடவை பாதை மற்றும் ஹிரிபிட்டிய சந்தி, பசியால சந்தி, நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா சந்தி மற்றும் தலவத்துகொடை சந்தி ஆகிய இடங்களில் நிலவும் வாகன நெரிசல்களுக்கு தீர்வுகளை வழங்குவதற்கான கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் தேவை வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க குறித்த இடங்களில் 04 மேம்பாலங்களை நிர்மாணிக்கும் பொருட்டு நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |