• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-01-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறிய தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களின் புத்துயிரளிப்பு கருத்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்பட்டுள்ள நிதி நிகழ்ச்சித்திட்டத்தின் காலத்தை நீடித்துக் கொள்தல்
- கமத்தொழில் அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்தின் நிதி உதவியின் மீது செயற்படுத்தப்படும் சிறிய தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களின் புத்துயிரளிப்பு கருத்திட்டத்தின் கீழ் குறியிலக்காக் கொள்ளப்பட்ட பயனாளிகள் வருமானம் ஈட்டுதல் மற்றும் சந்தை பல்வகைமை நடவடிக்கைகள் சார்பில் கிராமிய நிதி நிகழ்ச்சித்திட்டமொன்று 2019 - 2021 காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. COVID - 19 தொற்றுநிலமை காரணமாக கருத்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட குறியிலக்குகளை அடைவதற்கு இயலாமற் போயுள்ளமையினால் குறித்த கடன் நிகழ்ச்சித்திட்டத்தின் காலப்பகுதியை 2022 திசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கும் பொருட்டு பெருந்தோட்டத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.