• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-01-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் பயன்படுத்தப்பட்டு வரும் திருகோணமலை குச்சவௌி அனுப்பீட்டு நிலையம் அமைந்துள்ள காணியை உடைமையாக்குதல்
- இலங்கை அரசாங்கத்திற்கும் ஜேர்மன் குடியரின் ஒலிபரப்புச் சேவையான டொயிஸ்வெல் நிறுவனத்திற்கும் இடையில் 1980 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையொன்றுக்கு அமைவாக திருகோணமலை குச்சவௌி பிரதேசத்தில் 'ஜேர்மன் ஓசை' என்னும் ஒலிபரப்பு குறுகிய அலைவரிசை மற்றும் நடுத்தர அலைவரிசை அனுப்பீட்டு நிலையமொன்று தாபிக்கப்பட்டு நடாத்திச் செல்லப்பட்டது. 2012 ஆம் ஆண்டில் உரிய அனுப்பீட்டு நிலையத்தின் பணிகள் மற்றும் உரிமை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளதோடு, இந்த காணியின் 90 சதவீதம் அனுப்பீட்டு நிலையத்தின் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அனுப்பீட்டு நிலையத்தின் செயற்பாட்டிற்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில் சூரிய சக்தி மின்சார உற்பத்திக்காக உரிய காணியை பயன்படுத்தக்கூடிய சாத்தியம் நிலவுகின்றது. இதற்கிணங்க, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபத்திற்கு வருமானம் கிடைக்கும் வழியொன்றாக குறித்த காணியில் சூரிய சக்தி மின்சார உற்பத்தி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் உரிய காணியை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபத்திற்கு உடைமையாக்கும் பொருட்டு வெகுசன ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.