• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-01-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் அமைந்துள்ள காணியின் சட்டபூர்வமான உரிமையினை கூட்டுத்தாபனத்திற்காக பெற்றுக் கொள்ளல்
- கொழும்பு - 07, டொரிங்டன் சதுக்கத்தில் அமைந்துள்ள 3.37 ஹெக்டாயர் விஸ்தீரணமுடைய காணியில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் நடாத்திச் செல்லப்படுகின்றதோடு, இந்தக் காணிக்கான சட்டபூர்வ உரிமை இதுவரை கூட்டுத்தாபத்திற்கு கையளிக்கப்படவில்லை. இந்தக் காணியை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு உடைமையாக்குவதற்கு நகர அபிருத்தி அதிகாரசபை உட்பட ஏனைய சகல தரப்புகளும் உடன்பாட்டினைத் தெரிவித்துள்ளன. இதற்கிணங்க, உரிய காணியை இறையிலி கொடைப்பத்திரம் மூலம் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு உடைமையாக்கும் பொருட்டு வெகுசன ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.