2022-01-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ருகுணு பல்கலைக்கழகத்திற்கும் இங்கிலாந்தின் Northumbria பல்கலைக்கழகத்திற்கும் இடையில் கல்வி ஒத்துழைப்பினை பலப்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்துகொள்தல் - ருகுணு பல்கலைக்கழகத்திற்கும் இங்கிலாந்தின் Northumbria பல்கலைக்கழகத்திற்கும் இடையில் கல்வி ஒத்துழைப்பினை பலப்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்துகொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. நிபுணத்துவ கருத்துக்களை பரிமாறிக் கொள்தல், தெரிவுசெய்யப்பட்ட விடய தானங்கள் சம்பந்தமாக ஒத்துழைப்பினை பெற்றுக் கொள்தல் மற்றும் ருகுணு பல்கலைக்கழகத்தில் தகைமை பெற்ற மாணவர்களுக்கு Northumbria பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு பங்குபற்றுவதற்கு வாய்ப்பினை வழங்குதல் போன்ற துறைகள் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலம் தழுவப்படும். இதற்கிணங்க, இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |