2022-01-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள சோலைக்காடு என்னும் அரசாங்க காணியை அரசாங்க ஊழியர் வீடமைப்பு கருத்திட்டமொன்றுக்காக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு உடைமையாக்கிக் கொள்ளல் - வவுனியா பிரதேச செயலாளர் பிரிவின் ஓமந்தை கிராம உத்தியோகத்தர் பிரிவில் 92.92 ஹெக்டாயர் விஸ்தீரணமுடைய (ஏக்கர் 234 றூட் 02 பேர்ச்சர்ஸ் 10) காணியில் அரசாங்க ஊழியர் வீடமைப்பு கருத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் கீழ் உரிய காணியில் 711 காணித் துண்டுகள் பிரதேச செயலாளரின் சிபாரிசின் மீது இனங்காணப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு, 215 குடும்பங்களுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் வீடுகளை நிர்மாணிப்பதற்காக 500,000/- ரூபா வீதம் கடன் தொகையானது வழங்கப்பட்டுள்ளது. கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி தற்போது சுமார் ஒன்பது (09) வருடங்கள் கடந்துள்ள போதிலும் உரிய பயனாளிகளுக்கு இதுவரை குறித்த காணித் துண்டுகளுக்கான உறுதிகள் வழங்கப்படவில்லை. ஆதலால், இந்த பயனாளிகளுக்கு இறையிலி அடிப்படையில் உறுதிகளை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் குறித்த காணியினை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை உடைமையாக்கும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |