2022-01-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஹப்புத்தலை பொலிஸ் நிலையம் அமைந்துள்ள இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான காணித் துண்டை இலங்கை பொலிசுக்கு உடைமையாக்குதல் - ஹப்புத்தலை பொலிஸ் நிலையம் 1928 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான ஏக்கர் 01 றூட் 01 பேர்ச்சர்ஸ் 9.8 விஸ்தீரணமுடைய புகையிரத ஒதுக்கு காணியில் தாபிக்கப்பட்டுள்ளது. இந்த பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணி இதுவரை இலங்கை பொலிசுக்கு முறையாக கையளிக்கப்படாமையினால் பொலிசுக்குத் தேவையான புதிய கட்டடங்களை நிர்மாணிப்பதற்கோ அல்லது நிதி செலவு செய்து திருத்த வேலைகளை செய்வதற்கோ முடியாமற் போயுள்ளது. ஆதலால் குறித்த காணித் துண்டை இலங்கை பொலிசுக்கு உடைமையாக்கும் பொருட்டு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |