2022-01-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையின் கல்வி அமைச்சுக்கும் ஹங்கேரியாவின் வௌிநாட்டலுவல்கள் மற்றும் வர்த்தக அமைச்சுக்கும் இடையில் புலமைப் பரிசில் நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளல் - இரு நாடுகளுக்கிடையில் நிலவும் ஒத்துழைப்பினை மேலும் விருத்தி செய்து கொள்ளும் நோக்கில் ஹங்கேரியாவின் வௌிநாட்டலுவல்கள் மற்றும் வர்த்தக அமைச்சின் மேற்பார்வையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வௌிநாட்டு மாணவர்களுக்கான 'STIPENDIUM HUNGARICUM' என்னும் புலமைப் பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 2022-2024 காலப்பகுதிக்குள் இலங்கை மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஆரம்ப பட்டப்படிப்பு சார்பில் 08 வாய்ப்புகள், பட்டப்பின் பின்படிப்பு சார்பில் 08 வாய்ப்புகள், கலாநிதி பட்டப்படிப்பு சார்பில் 04 வாய்ப்புகள் என்பன இலங்கை மாணவர்களுக்கு உரியதாகும். இதற்கிணங்க, கல்வி அமைச்சுக்கும் ஹங்கேரியாவின் வௌிநாட்டலுவல்கள் மற்றும் வர்த்தக அமைச்சுக்கும் இடையில் குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையினைச் செய்து கொள்ளும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |