• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-01-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வீடொன்றோ அல்லது வீடொன்றை நிர்மாணிப்பதற்கு காணியோ இல்லாத வாடகை அடிப்படையில் வசிக்கும் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்கும் கருத்திட்டம்
- வீடொன்றோ அல்லது வீடொன்றை நிர்மாணிப்பதற்கு காணியோ இல்லாத காரணத்தினால் வாடகை அடிப்படையில் வசிக்கும் உண்மையாகவே வீட்டுத் தேவையுள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஏற்கத்தக்க விலையில் நிரந்தர வீடுகளை வழங்கும் நோக்கில் 'சொந்துரு மாடி வீடு' என்னும் பெயரில் வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டமொன்றை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கு கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்படும் பயனாளிகளுக்கு 500,000/- ரூபாவை ஆரம்பத் தொகையாக செலுத்துவதற்கான ஆற்றல் இருக்க வேண்டுமென்பதோடு, வீட்டுப் பெறுமதியின் மீதி தொகையானது ஒரு வருட காலத்திற்குள் தவணைகளாக அறவிடப்படும். தேவைகேற்றவாறு வங்கிகளின் ஊடாக கடன் தொகையொன்றை பெற்றுக் கொள்வதற்கும் தெரிவு செய்யப்படும் பயனாளிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இதற்கிணங்க, குறித்த வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னோடி கருத்திட்டமொன்றாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான ரன்பொக்குணுகமவில் அமைந்துள்ள காணித் துண்டில் 72 வீடுகளை நிர்மாணிப்பதற்குமாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.