2022-01-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பௌத்த மரபுரிமைகளை மேம்படுத்துவது சார்பில் இனங்காணப்பட்டுள்ள கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் - இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கலாசார மற்றும் மக்கள் தொடர்பாடலை மேம்படுத்துவதற்கும் இரு நாடுகளினதும் பௌத்த மரபுரிமைகளின் ஒத்துழைப்பினை பலப்படுத்துவதற்குமாக இனங்காணப்பட்டுள்ள கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு ஐந்து (05) வருடகாலத்திற்குள் 2.89 பில்லியன் ரூபாவைக் கொண்ட கொடையொன்றை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் உடன்பாட்டினைத் தெரிவித்துள்ளது. உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, ஆற்றல் அபிருத்தி, கலாசார அலுவல்கள், தொல்பொருளியல் ஒத்துழைப்பு, இலங்கையில் புத்த பெருமானின் சின்னங்களை காட்சிப்படுத்துதல் மற்றும் இந்தியாவுக்கான பௌத்த மத ரீதியிலான யாத்திரைகளை மேம்படுத்துதல் போன்ற விடயங்களுக்குரியதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் இந்திய உயர்ஸ்தானிகரும் இணைந்து இனங்காணப்பட்டுள்ள கருத்திட்டங்களை இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, உத்தேச நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |