• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கூரை மீது நிர்மாணிக்கப்படும் சூரிய மின் உற்பத்தி முறைமைகள் சார்பில் சக்தி சேமிப்பு மின்கல முறைமைகளை தாபிப்பதனை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித்திட்டம்
- 2030 ஆம் ஆண்டளவில் மின்சார தேவையின் 70 சதவீதம் மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தோற்றுவாய்களின் மூலம் பிறப்பிப்பதற்கும் 2050 ஆம் ஆண்டளவில் வலுசக்தி பிறப்பாகத்தின் போது மொத்த காபன் வௌியேற்றத்தினை பூச்சியமாக்குவதற்கும் தேவையான நடவடிக்கையினை எடுப்பதற்கு அரசாங்கத்தினால் கொள்கை தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாட்டின் மின்சார முறைமையில் சுமார் 400 மெகாவொட் ஆற்றல், கூரை மீது பொருத்தப்படும் சூரிய சக்தி மின்சார பலகங்களின் மூலம் வழங்கப்படுகின்றது இந்த முறைமைகள் சார்பில் புதிய கட்டண முறையொன்றின் மூலம் சுய நிதி முதலீட்டின் மீது மின்கல முறைமைகளை தாபிப்பதற்கு ஊக்குவிப்பதன் மூலம் நுகர்வோருக்கு மிக நம்பகரமான மின்சார விநியோகத்தினை பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கப்பெறும். இந்த நிலைமையின் கீழ் மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தோற்றுவாய்களின் மூலம் கிடைக்கப்பெறும் மின்சாரத்தினை கூடிய நூற்றுவீதத்தில் தேசிய முறைமையுடன் இணைக்கும் போது எழக்கூடிய தொழிநுட்ப சவால்களை இனங்கண்டு சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக உத்தியோகத்தர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த உத்தியோகத்தர்கள் குழுவின் அறிக்கையிலுள்ள சிபாரிசுகள் சம்பந்தமாக மேலும் ஆராயும் பொருட்டு அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு 2021 நவெம்பர் மாதம் 23 திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவை உபகுழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட சிபாரிசுகளுக்கு அமைவாக உத்தேச நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மின்சக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.