2022-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை பொலிசுக்கு 750 ஜீப் வண்டிகளை கொள்வனவு செய்தல் - விசேட அதிரடி படைக்கு 150 ஜீப் வண்டிகள் அடங்கலாக இலங்கை பொலிசுக்கு 750 ஜீப் வண்டிகளை இந்திய கடன் வழியின் கீழ் கொள்வனவு செய்வதற்கு 2020 நவெம்பர் மாதம் 16 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கியினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள கம்பனிகளிடமிருந்து கேள்வி கோரப்பட்டுள்ளதோடு, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு உரிய கேள்வியை இந்தியாவின் Mahindra & Mahindra Ltd., கம்பனிக்கு வழங்கும் பொருட்டு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |