2022-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இந்திய கடன் வழியின் கீழ் இலங்கை போக்குவரத்து சபைக்கு 32 ஆசனங்களைக் கொண்ட 500 புதிய பேருந்துகளை கொள்வனவு செய்தல் - இந்திய கடன் வழியின் கீழ் இலங்கை போக்குவரத்து சபைக்கு 32 - 35 ஆசனங்களைக் கொண்ட 500 புதிய பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு 2020 சனவரி மாதம் 08 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, பேருந்துகளை கொள்வனவு செய்வதற்காக முற்தகமைகளை பூர்த்தி செய்த மூன்று (03) நிறுவனங்களிடமிருந்து விலைமனு கோரப்பட்டுள்ளது. குறித்த விலைமனுக்கள் மதிப்பிடப்பட்டதன் பின்னர், அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 32 ஆசனங்களைக் கொண்ட 500 புதிய பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு இந்தியாவின் Ashok Leyland கம்பனிக்கு வழங்கும் பொருட்டு போக்குவரத்து அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |