2022-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மற்றும் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவகம் ஆகியவற்றுக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை ஏற்படுத்திக் கொள்ளல் - அரிசி விஞ்ஞானம் சார்ந்த கற்கை துறைக்குரியதாக திறந்த மற்றும் தொலைக்கல்வி வழிமுறைகளுக்கு ஏற்ற பாடநெறிகளை விருத்தி செய்தல், அமைப்புகள் மற்றும் ஆராய்ச்சி உறுப்பினர்களை பரிமாறிக் கொள்ளும் நிகழ்சசித்திட்டங்களை ஒழுங்கு செய்தல், கூட்டு ஆராய்ச்சி கருத்திட்டங்களை நடாத்துதல், மாநாடுகளை ஏற்பாடு செய்தல், ஆராய்ச்சி, வௌியீடுகள் மற்றும் தகவல்களை பரிமாறிக் கொள்ளல் போன்ற செயற்பாடுகளை மேம்படுத்துவதனை நோக்காக் கொண்டு 2017 ஒக்றோபர் மாதம் 19 ஆம் திகதியன்று இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கும் சருவதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இடையில் பரஸ்பர ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று செய்துகொள்ளப்பட்டுள்ளது. குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் காலத்தை மேலும் மூன்று (03) வருட காலத்திற்கு நீடித்து புதிய புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு இரு தரப்புக்கும் இடையில் உடன்பாடொன்று ஏற்பட்டுள்ளது. இதற்கிணங்க, உரிய புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |