2021-12-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
காணி அபிவிருத்தி கடடளைச்சட்டத்தை திருத்துதல் - காணி அபிவிருத்தி கடடளைச்சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள கொடைப்பத்திரங்களில் உள்ளடக்கப்படும் சில நிபந்தனைகள் காரணமாக குறித்த கொடைப்பத்திரங்களுக்குரிய காணித் துண்டுகளின் உச்சப் பயன் பெறுவதற்கு இயலாதென அவதானிக்கப்பட்டுள்ளமையினால் குறித்த இந்த நிபந்தனைகள் பொது மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் விதத்தில் திருத்துவதற்கு இயலுமாகும் வகையில் காணி அபிவிருத்தி கடடளைச்சட்டத்தை திருத்துவதற்கு 2021 சனவரி மாதம் 04 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தி்ல் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக காணி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |