2021-12-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நடைமுறையிலுள்ள குடும்பம் சார்ந்த பட்டியலுக்குப் பதிலாக e - கிராம உத்தியோகத்தர் கருத்திட்டத்தின் சமூகம் சார் தரவு முறைமையை பயன்படுத்துதல் - குடும்பம் சார்ந்த பட்டியலை பேணிவரும் வழிமுறையானது தற்போது நடைமுறையில் இல்லாததால் வதிவிடத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களை வழங்கும் போது வாக்காளர் அட்டவணை போன்ற பிற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, கிராம உத்தியோகத்தர்கள் செயலாற்றுவதால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. தற்போது உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் கீழ் 'e - கிராம உத்தியோகத்தர்' கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, இதன்கீழ் குடியிருப்பாளர் மற்றும் பிரசைகளின் தரவு முறைமையொன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது. இந்த கருத்திட்டத்தை சில கட்டங்களின் கீழ் 14,022 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் தழுவும் விதத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சமூகம் சார் தரவு முறைமையின் ஊடாக ஆள் ஒருவரின் தற்போதைய வதிவினை செம்மையாக உறுதிப்படுத்த முடியும். இதற்கிணங்க, நடைமுறையிலுள்ள குடும்பம் சார்ந்த பட்டியலின் தேசிய தரவு முறைமைக்குப் பதிலாக e - கிராம உத்தியோகத்தர் கருத்திட்டத்தின் தரவு முறைமையை கொள்கை ரீதியில் ஏற்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |