• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-12-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
டெங்கு நோயைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தல் என்பவற்றுக்காக பலதுறை அணுகுமுறைகளைப் பலப்படுத்துதல்
- தற்போது டெங்கு நோய் இலங்கையில் பொதுமக்களின் பிரதான சுகாதார பிரச்சினையாக மாறியுள்ளதோடு, 2021 நவெம்பர் மாதம் வரை 25,910 நோயாளிகள் காணப்படுவதோடு 19 மரணங்களும் நிகழ்ந்துள்ளன. இவ்வாறு மிக ஆபத்தான நிலையை அடைந்துள்ள டெங்குநோய் பரவலானது பருவமழை காலப்பகுதியில் மேலும் அதிகரிக்கும் போக்கும் நிலவுகின்றமையினால் தொற்று நிலைமை ஏற்படுவதை தடுப்பதற்கு உரிய சகல தரப்பினர்களினதும் பங்குபற்றுதலுடன் ஒன்றிணைந்த தேசிய ரீதியிலான வேலைத்திட்டமொன்றை அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பின்வரும் பிரேரிப்புகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* டெங்கு நோயைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தல் என்பவற்றை நிலையாக நடாத்திச் செல்வதற்கு ஒவ்வொரு நிறுவனத்திலும் இதன் பொருட்டு உத்தியோகத்தர் ஒருவரை பெயர் குறித்தல்.

* மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் விடயங்களை மீளாய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.

* டெங்கு நோய் தடுப்பு சம்பந்தமான மாகாண, மாவட்ட பிரதேச மற்றும் கீழ் மட்ட ஒருங்கிணைப்பு பணிகளுக்கான பொறுப்பினை மாகாண ஆளுநர்களுக்கு கையளித்தல்.

* டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்களை இற்றைப்படுத்தல்.

* டெங்கு நோய் தடுப்பு தொடர்பிலான மொத்த பணிகளையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பினை தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவுக்கு கையளித்தல்.