2021-12-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பாகிஸ்தான் சியால்கோர்ட் பிரதேசத்தில் மனிதாபிமானமற்ற முறையில் கொலை செய்யப்பட்ட திரு.பிறியந்த குமார தியவடன சார்பில் தொகையொன்றினை வழங்குதல் - பாகிஸ்தான் சியால்கோர்ட் பிரதேசத்திலுள்ள கைத்தொழிற்சாலையொன்றில் முகாமையாளராக கடமையாற்றிய திரு.பிறியந்த குமார தியவடன 2021 திசெம்பர் மாதம் 03 ஆம் திகதி குண்டர்கள் குழுவினால் மனிதாபிமானமற்ற முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். புலம்பெயர் ஊழியர் ஒருவராக 11 வருடங்களுக்கு மேலாக இலங்கை பொருளாதாரத்திற்கு அவர் வழங்கிய பரந்துபட்ட பங்களிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு அவருடைய மரணத்தினால் ஆதரவற்ற நிலைக்கு ஆளாகியுள்ள மனைவி மற்றும் பிள்ளைகளின் நலனோம்பலின் பொருட்டு மனிதநேய அடிப்படையில் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊழியர் நலனோம்பல் நிதியத்தின் ஊடாக 2.5 மில்லியன் ரூபாவை கொடையொன்றாக வழங்கும் பொருட்டு தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |