2021-12-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதியை நோக்காகக் கொண்ட வர்த்தக கமத்தொழில் கருத்திட்டங்களின் முதலீட்டாளர்களுக்கு மகாவலி அதிகார பிரதேசத்தில் அமைந்துள்ள காணிகளை நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்குதல் - COVID - 19 தொற்றுநிலைமையின் மத்தியில் உணவு இறக்குமதிக்காக அந்நியசெலாவணியை வௌிநாடுகளுக்கு செல்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் மறை ரீதியிலான தாக்கங்களை குறைக்கும் நோக்கில் உள்நாட்டில் பயிர்ச் செய்யக்கூடிய அத்தியாவசிய உணவுப் பயிர்களை பயிர் செய்வதற்கு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோன்று உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரித்தல், விலங்கு உணவுகளை உள்நாட்டில் உற்பத்தி செய்தல் என்பன சௌபாக்கியா தேசிய உணவு உற்பத்தி மேம்பாட்டு கொள்கையின் அடிப்படை நோக்கமாகும். இதற்கிணங்க, தேசிய உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதியை நோக்காகக் கொண்ட வர்த்தக கமத்தொழில் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக மகாவலி அதிகார பிரதேசத்தில் அமைந்துள்ள சுமார் 1,750 ஹெக்டாயர் விஸ்தீரணமுடைய காணியை முறையான வழிமுறையினைப் பின்பற்றி தெரிவு செய்யப்படும் முதலீட்டாளர்களுக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கும் பொருட்டு நீர்ப்பாசன அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |