2021-11-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உள்நாட்டு சந்தையில் அரிசியின் விலையை நிலைப்படுத்துவதற்காக மியன்மாரிலிருந்து அரிசி இறக்குமதி செய்தல் - தட்டுப்பாடின்றி போதுமானளவு அரிசியினை நுகர்வோருக்கு கிடைக்கச் செய்விப்பதற்கும் பாதுகாப்பான அரிசித் தொகையொன்றினைப் பேணுவதற்கும் இயலுமாகும் வகையில் 100,000 மெற்றிக் தொன் வரை அரிசி இறக்குமதி செய்வதற்கு 2021 செப்ரெம்பர் மாதம் 27 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அரசாங்கத்திடமிருந்து அரசாங்கத்திற்கு (G to G) என்னும் முறையின் கீழ் இலங்கை அரசாங்கத்திற்கும் மியன்மார் அரசாங்கத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கையொன்றின் மீது மியன்மாரிலிருந்து 20,000 மெற்றிக் தொன் அரிசியினை மெற்றிக் தொன் ஒன்று 460 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வீதம் இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக இறக்குமதி செய்யும் பொருட்டு வர்த்தக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |