2021-11-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் இருதய நோய் சிகிச்சை கட்டட தொகுதியினை நிர்மாணித்தல் - சப்பிரகமுவ மாகாணத்தில் வசிக்கும் அண்ணளவாக 2 மில்லியன் மக்களுக்கு இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் ஊடாக சுகாதார சேவைகள் வழங்கப்படுகின்றது. இந்த வைத்தியசாலையில் ஏற்கனவே இருதய நோய் சிகிச்சை சேவைகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் இதற்குத் தேவையான பௌதிக வசதிகள் போதுமானதாக இல்லாமையினால் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. ஆதலால் இந்த வைத்தியசாலைக்குத் தேவையான வசதிகளுடன்கூடிய இருதய நோய் சிகிச்சை கட்டட தொகுதியினை நிர்மாணிப்பதற்கும் இதற்கான ஒப்பந்தத்தை வடிவமைத்து, நிர்மாணித்து, கையளிக்கும் அடிப்படையில் மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு கையளிக்கும் பொருட்டும் சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக் கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |