• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-11-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2022 நிதி ஆண்டிற்கான நிதி ஆணைக்குழுவின் சிபாரிசுகள்
- இலங்கை அரசியலமைப்பின் 154ண ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் தாபிக்கப்பட்டுள்ள நிதி ஆணைக்குழுவினால் மாகாண சபைகள் சார்பில் வருடாந்த வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நிதியினை பகிர்ந்தளிக்கும் போது பின்பற்றப்படவேண்டிய கொள்கைகள் தொடர்பில் அதிமேதகைய சனாதிபதி அவர்களுக்கு சிபாரிசுகள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். இதற்கிணங்க, நிதி ஆணைக்குழுவினால் 2022 நிதி ஆண்டிற்கான சிபாரிசுகள் அதிமேதகைய சனாதிபதி அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 154ண(7) ஆம் உறுப்புரையின் பிரகாரம் குறித்த சிபாரிசுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.