2021-11-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
டிஜிட்டல் வங்கிமயப்படுத்தல், Blockchain தொழிநுட்பம் மற்றும் Cryptocurrency சம்பந்தமாக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பித்தல் - டிஜிட்டல் வங்கிமயப்படுத்தல், Blockchain தொழிநுட்பம் மற்றும் Cryptocurrency சார்ந்த கம்பனிகளின் முதலீட்டினை ஈர்ப்பதற்காக விதிக்கக்கூடிய சட்டங்கள் பற்றி அமைச்சரவைக்கு சிபாரிகளை சமர்ப்பிக்கும் பொருட்டு குழுவொன்றை நியமிப்பதற்கு 2021 ஒக்றோபர் மாதம் 05 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க திரு.சுஜீவ முதலிகேயின் தலைமையில் 08 உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை அமைச்சரவையின் கவனத்திற்கு இந்தக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. குழுவின் இறுதி அறிக்கையானது 2022 யூன் மாதம் 30 ஆம் திகதியளவில் சமர்ப்பிப்பதற்கும் குழுவுக்கு ஒத்துழைப்பு நல்குவதற்காக உரிய துறையில் செயலாற்றும் மேலும் 02 தொழிநுட்ப வல்லுநர்களை உறுப்பினர்களாக நியமிப்பதற்குமாக அபிவிருத்தி கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |